×

குளித்தலையில் அஞ்சலக சேமிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு மக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகம்

 

குளித்தலை, பிப். 5: குளித்தலையில் அஞ்சலகசேமிப்பு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. குளித்தலை தலைமை அஞ்சலக அலுவலகத்தில் அஞ்சல் துறையில் பொதுமக்கள் சேமிக்கும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தி உள்ளது. அதனை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குளித்தலை தலைமை தபால் நிலைய அலுவலகம் சார்பில் தலைமை உதவி அஞ்சலக அதிகாரி குப்பு லட்சுமி தலைமையில் கணக்காளர் கண்ணதாசன் முன்னிலையில் கடைகள் வீடுகளில் நேரடியாக சென்று துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

மக்களுக்கு சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய வாடிக்கையாளர்களை முனைப்போடு சேர்க்கும் பணி தொடங்கியது. அப்போது அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, மாதாந்திர வருமான திட்டம், 1,2,3,5 வருட கால வைப்பு கணக்கு முதியோருக்கான சேமிப்பு திட்டம், செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம், பொது வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம், மகளிர் மதிப்பு திட்டம் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை வீடுகள் மற்றும் கடைகளில் வழங்கினர். இதில் குளித்தலை பகுதி போஸ்ட்மேன்கள், காசாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post குளித்தலையில் அஞ்சலக சேமிப்பு திட்டம் குறித்து விழிப்புணர்வு மக்களுக்கு துண்டுபிரசுரம் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,Kulithalai Head Post Office ,Kuluthalai ,
× RELATED கரூரில் நாய்களிடம் கடிபட்டு புள்ளி மான் உயிரிழப்பு..!!